யார் இந்த ஈரானிய சீர்திருத்தவாதி?

ஈரானிய நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சுகாதார அமைச்சருமான மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) , அந்நாட்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில், அதிக வாக்குகளைப் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். சனிக்கிழமை காலை ஈரானின் உள்துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட இறுதி முடிவுகளின்படி, வாக்குப்பதிவு முடிந்து 12 மணி... Read more »

குலுங்கிய விமானம் : 325 பேருடன் அவசரமாக தரையிறக்கம்

ஸ்பெயினில் இருந்து உருகுவே நோக்கிப் பறந்த ஏர் யூரோபா விமானம் பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. UX045 என்ற விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதாகவும் இதன் காரணமாக சாவ் பாலோவில் உள்ள நடால் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் அவசரமாக... Read more »
Ad Widget

இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை

சமூக சுதந்திரம் மற்றும் பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற முக்கிய முழக்கத்துடன் ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மஷுத் பெஷேஷ்கியன் முதல் சுற்றில் 42.5 வீத வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அரசியலமைப்பின் படி, வெற்றி பெறுவதற்கு... Read more »

ஒற்றை வார்த்தையில் முன்னிலை வகிக்கும் தொழிற்கட்சி

பிரித்தானியாவில் நாளை மறுதினம் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள பொதுத்தேர்தல் அனைவரதும் எதிர்ப்பார்ப்பாகவே காணப்படுகின்றது. மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை பிரச்சாரத்தில் மையப்படுத்தி பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தொழிற்கட்சி முன்னிலை வகிக்கின்றது. 14 ஆண்டுகால ஆட்சியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியமைக்காக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ்... Read more »

இ-சிகரெட் விற்பனையை கட்டுப்படுத்தும் அவுஸ்திரேலியா

நிக்கோட்டின் கலந்த இ-சிகரெட்டுகளை மருந்தகங்கள் ஊடாக விற்பனை செய்வதில் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு அவுஸ்திரேலியா நடவடிக்கை எடுத்துள்ளது. சில கடுமையான vape எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இ-சிகரெட்டுகளை கொள்வனவு செய்வதை கடினமாக்கியுள்ளது. இதன்படி, (01) முதல் இலத்திரனியல் சிகரெட்டுகளை கொள்வனவு செய்யும் போது... Read more »

பெரும்பான்மை இல்லை : ஈரானில் மீண்டும் ஜனாதிபதித் தேர்தல்

ஈரானில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் எந்தவொரு வேட்பாளரும் பெரும்பான்மையை பெறாமையால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் கட்டத்திற்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியக் குடியரசு மேற்காசியாவில் அமையப்பெற்றுள்ள ஈரான் நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (28.06.24) ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இறுதி... Read more »

விக்கிலீக்ஸ் இணைய நிறுவனர் தாயகம் திரும்புவாரா? அமெரிக்காவின் தீர்ப்பு

பிரபல அவுஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே இன்று வியாழக்கிழமை (27.06.24) அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பாக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் இராணுவ இரகசியங்களை அவர்... Read more »

நேட்டோவின் தலைமை நெதர்லாந்து வசமானது

நேட்டோ அமைப்பின் பொது செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட 32 நாடுகளை உள்ளடக்கியது நேட்டோ அமைப்பு. உலகில் மிகப்பெரிய பாதுகாப்பான அமைப்பாக இது கருதப்படுகிறது. இந்த 32 நாடுகளும் தங்களுக்குள் ஆயுதங்களை பரிமாறிக் கொள்ள முடியும். 32 நாடுகளில்... Read more »

பிரித்தானிய ஸ்ட்ரேலிங் பவுண்ட் பெறுமதி உயர்வு

பிரித்தானியாவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே காணப்படுகின்ற நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதி உயர்வடைந்துள்ளது. எதிர்கட்சியான தொழிற் கட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஸ்ட்ரேலிங் பவுண்ஸின் பெறுமதி உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது கன்சர்வேற்றீவ் கட்சி... Read more »

கென்ய நாடாளுமன்றத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள் – ஐவர் பலி

கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, கென்ய நாடாளுமன்றத்தை இன்று (25) முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் சுமார் 31 பேர் காயமாடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »