பிரித்தானியாவில் மூதாட்டிக்கு கிடைத்த மிகப்பெரும் பரிசுத் தொகை!

பிரித்தானியாவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஒருவருக்கு லொத்தரியில் மிகப்பெரும் பரிசு கிடைத்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் டோரிஸ் ஸ்டான்பிரிட்ஜ் என்ற பெண் தனது 70-வது பிறந்த நாளையொட்டி நேஷனல் லொத்தரியில் பரிசுசீட்டு வாங்கி கொண்டாடியுள்ளார். அவருக்கு அந்த லொத்தரி சீட்டில்... Read more »

11 வருடங்களின் பின் இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு கிடைத்த மகிழ்ச்சித் தகவல்!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை கோரி பலரட்டிலிருந்து சிட்னியில் பிரதமர் அலுவலகம் வரை நடைபயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் நெய்ல் பராவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவுஸ்திரேலியா நிரந்தர விசா வழங்கியுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   பிரிட்ஜிங் விசாவினால் சிக்குண்டுள்ள அகதிகளிற்கு அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி... Read more »
Ad Widget

சுவிஸ் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழர்

சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர் ஒருவர் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸில் வசிக்கும் ஈழத்தமிழர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு குரல் கொடுக்கும் பிரதான கட்சியான பசுமை கட்சி சார்பாக சுவிட்சர்லாந்து ஆர்காவ் மானிலம்... Read more »

சர்வதேசத்திடம் நீதிகோரும் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள்

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் எனக் கோரி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அண்மையில் பிரித்தானியாவில் Trafalgar Square பகுதியில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழர்களால் இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு... Read more »

மத்திய கிரீஸ் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மத்திய கிரீஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு காணாமல் போனதாகக் கருதப்பட்ட நான்கு பேரின் உடல்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேற்கு தெசலியில் உள்ள கார்டிட்சா நகருக்கு அருகில் உள்ள கிராமங்களில் மூன்று உடல்கள்... Read more »

சிங்கப்பூரில் கொலை குற்றச்சாட்டில் கைதான இலங்கை நபர்

சிங்கபூரில் ஹோட்டலில் வைத்து மனைவியை கொலை செய்த இலங்கையை சேர்ந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். காத்தோங்கில் உள்ள ஹோட்டலில் மனைவியைக் கொன்ற குற்றச்சாட்டில் 30 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலில் மனைவியை கொலை செய்ததாக பொலிஸில் சரணடைந்தார். ஹோட்டலில்... Read more »

மாலைதீவில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்டமான மாலைத்தீவில் இன்று ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. மாலைத்தீவில் உள்ள மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்ததுடன், உலகில் மாலைத்தீவு மக்கள் வாழும் சில நாடுகளில் உள்ள தூதரகங்களில் வாக்குச் சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் பெருமளவான மாலைத்தீவு மக்கள் வாழ்கின்றனர்.... Read more »

சீனாவில் ஜபோன் பயன்பாட்டிற்கு தடை!

உலகின் முன்னணி கையடக்க தொலைபேசி நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின் பல நாடுகளிலும் அதிகம் புகழ் பெற்றுள்ளன. சீனாவிலும் இந்த ஐபோனை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் புதிய தயாரிப்பு... Read more »

கனடாவில் கொரொனோ தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கையில் உயர்வடைந்துள்ளது. வான்கூவாரில் கூடுதல் எண்ணிக்கையில் நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறெனினும் தற்போதைக்கு தொற்று பரவுகை நிலைமையாக பிரகடனம் செய்ய முடியாது என மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வேறு நோய்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு... Read more »

சவுதி அரேபியா விமான நிலையத்தில் தூங்கி ஓய்வெடுக்க அறைகள் அறிமுகம்

சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களுக்கு காத்திருக்கும் பயணிகள் தூங்கி ஓய்வெடுக்க ஸ்லீப்பிங் கேப்ஸ்யூல் அறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அறைகளில் ஏசி, திரைசீலைகள், வெளிச்சத்தை தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வகையிலான மின்விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிறுவனம் ஒன்றினால்... Read more »