பாராளுமன்ற பிரதிநிதிகளை கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – மணிவண்ணன் உறுதி

அதிகூடிய பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றால் நாங்கள் ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகளைக் கூட்டாக்குவதில் எமது செயற்பாட்டை  முன்நகர்த்துவோம் – விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவிப்பு. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து... Read more »

சுகாஷின் ஆதரவாளர்களை கைது செய்து மிரட்டிய பொலிஸார்! யாழில் பதற்றம் 

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இன்று காலை துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர், சிரேஷ்ட சட்டத்தரணி கனகரட்ணம்  சுகாஷின் ஆதரவாளர்களை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இதேவேளை, சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற... Read more »
Ad Widget

விண்ணனிடம் ரூ.1000 கோடி நட்டஈடு கோரும் டக்ளஸ் தேவானந்தா !

வெற்றியினை பாதிக்கக்கூடிய வகையில் திட்டமிட்ட வகையில் அவதூறு – “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்! விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜசிங்கம் என்பவர் தனது நற்பெயருக்கும் தன் மீது மக்கள் கொண்டுள்ள நன் மதிப்புக்கும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய... Read more »

பொய்களைப் பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல – ஈ. பி. டி. பி. 

பாராளுமன்றத் தேர்தல் அண்மித்து வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதி அநுர – டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக டக்ளஸ் தேவானந்தா கூறி வருவதாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது கூறியதாக ஊடகங்களில் செய்தி... Read more »

யுத்த வடுக்களை, கண்ணீரை வைத்து பிழைப்பு அரசியல் செய்கிறீர்கள்! வெட்கமாக இல்லையா? – அங்கஜன்

எமது ஆட்கள் சத்தமில்லாமல் வாக்கிடும் வேலையை செய்து நவம்பர் 14 இல் நாட்டுக்கு நாம் யார் என்பதை காட்டுவார்கள் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும் ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனநாயக தேசிய கூட்டணியின் மாபெரும் மக்கள் எழுச்சி... Read more »

அவதூறு பரப்பும் அயோக்கியர்கள் – வேட்பாளர் சுரேன் பதிலடி

சங்கு சின்னத்தின் மீது அச்சப்பட்ட எதிர்த்தரப்பினர் எங்கள் மீது பொய்யான அவதூறுகளைப் பரப்பி, எங்களுக்குள்ளே இருக்கின்ற, கையூட்டுக்கு மயங்கக்கூடிய, சொற்படிவித்தைகளுக்கு மயங்கக்கூடிய, எதற்கும் விலை போகக்கூடிய அயோக்கியர்களை இனம் கண்டு அவர்களுடாக எங்களுடைய வெற்றி வேட்பாளர்களுக்கு எதிராக சேறு பூசிக்கொண்டு இருக்கின்றார்கள். – இவ்வாறு... Read more »

சுன்னாகம் பொலிஸாரை தண்ணியில்லா காட்டுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் – பிரகாஷ் காட்டம்

சுன்னாகத்தில் ஒரு சாதாரண விபத்தில் தவறிழைத்தவர்களை விட்டுவிட்டு காட்டுமிராண்டித் தனமாக வானில் வந்த அப்பாவி மக்கள் மீது கோரத்தனமாகத் தாக்கிய பொலிஸாரும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் உடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவதுடன், அவர்களை உடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தண்ணியில்லா காட்டுக்கு இடமாற்றம்... Read more »

தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது –  மணிவண்ணன் 

ஜனாதிபதி அநுரகுமார உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியினர் மனதில் மாற்றங்கள் ஏற்பட்டு, தமிழர் நலன்சார்ந்து செயல்படுவார்களெனில் அவர்களுக்கு தமிழ் கட்சிகள் ஆதரவளிக்கும். அதற்காக தமிழ் மக்கள் நேரடியாக சிங்கள கட்சிகளுக்கு வாக்களிக்க தேவையில்லை. இதனை நான் இனவாதியாகக் கூறவில்லை. ஓர் இனப்பற்றாளனாக தமிழ் மக்களிடம்... Read more »

வீட்டுச் சின்னத்துடன் சசிகலா போஸ்டர் – சாவகச்சேரியில் குழப்பம்

சங்கு சின்னத்தில் போட்டியிடும் சசிகலாவின் வாக்குகளை திருடும் அல்லது திசை திருப்பும் நோக்கில் சாவகச்சேரியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் மாமனிதர் ரவிராஜின் மனைவி சசிகலா, இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிடுகிறார் என்று குழப்பம் ஏற்படும் விதமாக இவ்வாறு... Read more »

தமிழரசின் தலைவர் நான்தான் – தேர்தலின் பின் நடக்கப்போவதை பாருங்கள்

பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பேன் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். அதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என்றும் இப்போது நீதிபதி மக்களாகிய நீங்களே என்றும் அவர்  கூறினார். யாழ். வடமராட்சி ஊடக... Read more »