இஸ்ரேலின் தாக்குதல்களை குறைவாக மதிப்பிட முடியாது!

ஈரான் மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை குறைத்து மதிப்பிட கூடாது என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei) சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானுக்கு(Iran) எதிரான நடவடிக்கைகளின் தாக்கங்களை இஸ்ரேல் நீடிக்க விரும்பும் அதே வேளை, தமது நாட்டின் திட்டமிடல்களையும் நிராகரிப்பது ஆபத்தை... Read more »

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி!

இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே அரசியல் மக்களுக்கு விரும்பத்தகாததாக மாறியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார... Read more »
Ad Widget

உரிமை கோரப்படாத நிலையில் சொகுசு வாகனமொன்று மீட்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தென் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் பயன்படுத்திய சொகுசு வாகனமொன்று கைப்பற்றப்பட்டுள்ளது. மாத்தறை பாபுரண பிரதேசத்தில் சொகுசு வாகனமொன்று கைவிடப்பட்டுள்ள நிலையில் மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அதிகாரிகள் குழுவொன்று அந்த இடத்திற்கு சென்று குறித்த கெப் வாகனத்தை... Read more »

மதிப்புமிக்க பாலன் டி’ஓர் விருது வழங்கும் நிகழ்வு இன்று!

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருது வழங்கும் நிகழ்வானது திங்கட்கிழமை (28) நடைபெறவுள்ளது. 68 ஆவது முறையாக நடத்தப்படும் மதிப்பு மிக்க இந்த விருது வழங்கும் நிகழ்வானது பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் திங்கட்கிழமை மாலை நடைபெறும். பிரமாண்டமான இந்த... Read more »

சுங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்ட 637 வாகனங்கள்!

இலங்கை சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்ட பல்வேறு மாதிரிகள் கொண்ட 637 வாகனங்கள், பாவனைக்கு தகுதியற்றதாக சிதைவடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இவற்றில் 435 வாகனங்கள் மட்டக்குளியில் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 202 வாகனங்கள் ருஹுனுபுர துறைமுக... Read more »

இலங்கைக்கு பயணத் தடை எதுவும் விதிக்கவில்லை – அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான பயணத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் (Julie Chung) தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமெரிக்கத் தூதுவர் இதனை தெரிவித்தார் அறுகம்பை பகுதிக்கு விஜயம் செய்யும் போது அமெரிக்க பிரஜைகளுக்கு அவதானத்துடன் செயற்படுமாறு... Read more »

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: கடினமான பாதையில் இலங்கை!

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பானது இலங்கைக்கு கடினமாக காணப்படுவதாக ஐசிசி கணித்துள்ளது. தற்சமயம் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இலங்கை 55.56% புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் நடந்த மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிரான தலைகீழான... Read more »

அரசியல்வாதிகள் மக்களை எதிர்கொள்ள அஞ்சுகின்றர்! -ரஞ்சன் ராமநாயக்க

மக்கள் மத்தியில் செல்வதற்கு அஞ்சுவதனாலேயே சிரேஷ்ட அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் அமைச்சரவை அமைச்சர்கள் பலர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாக ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ரஞ்சன் ராமநாயக்க... Read more »

வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவர் கைது!

அநுராதபுரம் மாவட்டத்தில் வெடிபொருட்கள் வைத்திருந்த குற்றச் சாட்டில் இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது குறித்த நபர்களிடம் இருந்த வெடி பொருட்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... Read more »

தங்கத்தின் விலையில் உயர்வு!

கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 219,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 201,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக அகில... Read more »