முடங்க தயாராகும் தபால் சேவை

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் நாளை மறுதினம்(10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள தபால் காரியாலயங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனைய பல கோரிக்கைகளை முன்வைத்தும்... Read more »

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அம்பாறை – மஹாஓய பிரதேசத்தில் மாட்டு கொட்டகை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹாஓய – தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மஹாஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... Read more »
Ad Widget

தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்றால் கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிறிய ஆலை உரிமையாளர்களால்... Read more »

தனிநபரின் வரிச் செலவு அதிகரிக்கும்

அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, தனி நபர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலட்சம் ரூபா... Read more »

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. Read more »

சாரதியால் தாக்கப்பட்ட நேர கண்காணிப்பாளர் வைத்தியசாலையில்

அம்பாறை அக்கரைப்பற்று பேருந்து தரிப்பிடத்தில் இலங்கை போக்குவரத்து சபை நேர கண்காணிப்பாளருக்கும் தனியார் பேருந்து சாரதிக்கும் இடையில் இன்று (08) முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது குறித்த சாரதி, நேர கண்காணிப்பாளரை தாக்கியதில் அவர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உரிய நேரத்திற்கு பேருந்தை... Read more »

பூசாரியின் தாக்குதல் ஒருவர் பலி: ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பு – வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் உள்ள பௌத்த பத்தினி தேவாலயத்தில் நோயை குணப்படுத்திக் கொள்ள சென்ற சகோதரனும் சகோதரியுமான இருவர் மீது ஆலைய பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் ஆண் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த... Read more »

கலுகல பகுதியில் இபோச பேருந்து விபத்து

நோட்டன் – லக்ஸபான வழியான கலுகல வீதியின் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. லக்ஸபான பகுதியில் இபோச பேருந்தொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இவ்வாறு போக்குவரத்த தடை ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக நோர்ட்டன் – கலவலதெனிய வீதியை பயன்படுத்துமாறு நோட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில்... Read more »

1,286 கிலோ பீடி இலைகள் மீட்பு

கற்பிட்டி – நுரைச்சோலை தேத்தாப்பொல பகுதியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒருதொகை பீடி இலைகள் கடற்படையினரால் நேற்று (07) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது, சந்தேகத்தின் பெயரில் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 28 வயதுடைய இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமேற்கு கடற்படை கட்டளையின் விஜய... Read more »

புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில்

இலங்கை மின்சார சபை, அதனை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கிய புதிய மின்சார சட்ட மூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய தேசிய மின்சார ஆலோசனை சபையொன்றை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உறுப்பினர்களை அமைச்சர் சபையின் ஒப்புதலுடன் அமைச்சரே நியமித்து அவர்களில் ஒருவர்... Read more »