வானிலை முன் அறிவிப்பு

இலங்கையில் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.... Read more »

ஊடகவியலாளர்களின் சம்பளம் அதிகரிக்குமா?

ஊடகவியலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில்  (08) வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்தார். நாட்டில் தற்போது ஊடகவியலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும்... Read more »
Ad Widget

ஜப்பானில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானில் இலங்கையர்களுக்காக தொழில் வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜப்பானில் உள்ள விமான நிலைய தரைக் கையாளுதல் பிரிவில் வேலைகளுக்கு இலங்கையர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும், அதற்கான திறமைப் பரீட்சைகள் எதிர்வரும் மார்ச் மாதம் நடத்தப்படும் எனவும்... Read more »

இன்றைய ராசிபலன் 09.12.2023

மேஷம் ராசி  மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று இன்று சந்திர பகவான், துலாம் ராசியில் சுக்கிரனுடன் சஞ்சாரம் செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன ஆறுதலும் கிடைக்கும். சிறு சிறு சண்டைகள் இருந்தாலும் குடும்பத்தில் நெருக்கம் அதிகரிக்கக் கூடியதாக இருக்கும். இன்று ஆஞ்சநேயருக்கு தீபம் ஏற்றி... Read more »

தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள் அலைக்கழியும் பொதுமக்கள் .

தந்திரமாக பறிக்கப்படும் உள்ளூராட்சி அதிகாரங்கள் அலைக்கழியும் பொதுமக்கள் . இதுவரை காலமும் மாநகரசபைகள் மற்றும் நகரசபைகளிற்கு மட்டுமே அத்தியாவசியமாக்கப்பட்டு காணப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட வரம்பு என்பது 2022ஆம் ஆண்டு நகர அபிவிருத்தி அதிகார சபையால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலினால்... Read more »

முடங்க தயாராகும் தபால் சேவை

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் நாளை மறுதினம்(10) மாலை 4 மணி முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் மீண்டும் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளது. நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களில் உள்ள தபால் காரியாலயங்களை விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏனைய பல கோரிக்கைகளை முன்வைத்தும்... Read more »

அம்பாறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

அம்பாறை – மஹாஓய பிரதேசத்தில் மாட்டு கொட்டகை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹாஓய – தம்பதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் மஹாஓய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக... Read more »

தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்றால் கடும் நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளிக்கும் போதே விவசாய அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சிறிய ஆலை உரிமையாளர்களால்... Read more »

தனிநபரின் வரிச் செலவு அதிகரிக்கும்

அரசாங்கம் விதிக்க உத்தேசித்துள்ள வரிகள் காரணமாக, தனி நபர் 2024ஆம் ஆண்டில் மேலும் 30,000 ரூபாவை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கும் என வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ஒரு இலட்சம் ரூபா... Read more »

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடன்

இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் சலுகைக் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையின் நிதித்துறையை ஸ்திரப்படுத்த உதவுவதற்காக இந்த கடனுதவி வழங்கப்படவுள்ளது. Read more »