மெல்சிறிபுர பண்ணையில் விளையாட்டு மைதானம்

மெல்சிறிபுர பண்ணைக்கு சொந்தமான காணியை விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் கீழ் இயக்கப்படும் மெல்சிறிபுர பண்ணைக் காணியில் இருந்து 05 ஏக்கர் காணியை பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக இப்பாகமுவ பிரதேச சபைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பண்ணையின் மெதமுல்ல பிரிவிலிருந்து 05 ஏக்கர் காணியை ஒதுக்குவதற்கு பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த காணியை இப்பாகமுவ பிரதேச சபைக்கு வழங்குவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Recommended For You

About the Author: admin