தேசிய மக்கள் சக்தியே தலைமைத்துவதை வழங்கும்

நாட்டுக்கு மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புதிய அரசியல் பயணத்திற்கு தேசிய மக்கள் சக்தியை தலைமைத்துவத்தை வழங்கும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய... Read more »

IPL: போட்டிகளை மார்ச் 22 – மே 26 வரை நடத்த திட்டம்

2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான திகதிகள் இன்னும் உத்தியோப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் போட்டிகள் மார்ச் அன்று ஆரம்பிக்கப்படும் என்று உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின்... Read more »
Ad Widget

போட்டியில் இருந்து ஒதுங்கிய டி சான்டிஸ்: அதிகரிக்கும் டிரம்புக்கான ஆதரவு

அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்பது தொடர்பிலான போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. ஜனநாயாக கட்சியில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடும் நிலையில், அவரை எதிர்த்து குடியரசு கட்சி... Read more »

டைம்ஸ் சதுக்கத்தில் அயோத்தி கொண்டாட்டம்

உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவர் ஸ்ரீ ராமா் (ராம் லல்லா) சிலை இன்று திங்கட்கிழமைபிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்தியாவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவின் நியுயோர்க் நகரத்தில் அமைந்துள்ள டைம்ஸ்... Read more »

துப்பாக்கிச்சூடு: அபே ஜன பல கட்சி தலைவர் உள்ளிட்ட ஐவர் உயிரிழப்பு

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். மாத்தறை – பெலியத்த பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு... Read more »

மரக்கறி விலை குறைந்தது

கடந்த 5 நாட்களில் சந்தையில் மரக்கறிகளின் விலை 40 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அனுர சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து... Read more »

வெற்றிலைக்கேணியில் கோர விபத்து – இருவருக்கு பலத்த காயம்

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கோரியடி பகுதியில் நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது. வெற்றிலைக்கேணியில் இருந்து மருதங்கேணி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும், மருதங்கேணியில் இருந்து கட்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. பட்டாரக வாகனத்தை முந்திச் செல்ல... Read more »

முட்டை விலை அதிகரிப்பு

VAT வரி அதிகரிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாவால் அதிகரிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சதொச ஊடாக 35 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டை 43 ரூபாவுக்கு விற்பனை... Read more »

சீனாவில் மண்சரிவு: 47 பேர் மாயம்

சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லியாங்சுய் கிராமத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 47 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (22) அதிகாலை இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more »

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் கைது

பாதாள குழுக்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். கஹதுடுவ – உஸ்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஜூன் மாதம் 21ஆம் திகதி பலப்பிட்டிய பிரதேசத்தில்... Read more »