பனங்காடு வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடல்

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரை சந்தித்து அவ் வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடினார். வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளை கேட்டறிந்து கொண்ட பிராந்திய பணிப்பாளர் சுகாதார மேம்பாடு மற்றும்... Read more »

பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் குறித்து வெளியான செய்தி

அரசு பாடசாலைகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலை மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள்... Read more »
Ad Widget

ஐ.நாவின் தீர்மானத்தை நிராகரிக்கும் அரசாங்கம்

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51இன் கீழ் முதலாம் இலக்கத் தீர்மானத்தை நிராகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண... Read more »

விவசாயிகளுக்கான உர மானியம் திங்கள் முதல்!

உர மானியமாக நெல் விவசாயிகளுக்கு 25,000 ரூபாவை வழங்கும் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (14) அம்பாறை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (08) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்திர ஊடகவியலாளர்... Read more »

கடந்த அரசாங்கத்தின் பல திட்டங்கள் இரத்து!

கடந்த அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல திட்டங்களை இரத்து செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். இது தொடர்பான அமைச்சரவை... Read more »

கென்ய தடகள வீரர் மரணம்!

2017 லண்டன் உலக சாம்பியன்ஷிப் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ய தடகள வீரர் கிபிகோன் பெட் (Kipyegon Bett) காலமானார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பால் நீண்ட காலமாக உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த 26 வயதான வீரர் ஞாயிற்றுக்கிழமை... Read more »

உபுல் தரங்கவை கைது செய்ய உத்தரவு

ஆட்டைய நிர்ணய சதி சம்பவம் தொடர்பில் சாட்சியமளிக்க நீதிமன்றில் ஆஜராகாத கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் உபுல் தரங்கவை விமான நிலையத்தில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தளை மேல் நீதிமன்றம் இன்று (08) பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் பல்லேகல... Read more »

ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து... Read more »

முன்னாள் எம்.பிக்களின் பயன்படுத்தாத முத்திரைகளை கையளிக்குமாறு அறிவித்தல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த முத்திரைகளை... Read more »

இலங்கைக்கு அமெரிக்கா உதவி

இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும்... Read more »