ஹம்பாந்தோட்டையில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாத்திரம் 87 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான எயிட்ஸ் நோயாளர்கள், அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ மற்றும் திஸ்ஸமஹாராம ஆகிய பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளனர்.

மேலும், எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப கட்டங்களிலேயே உரிய சிகிச்சைகளை அளிப்பதினால் அவர்களைக் குணப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin