முன்னாள் எம்.பிக்களின் பயன்படுத்தாத முத்திரைகளை கையளிக்குமாறு அறிவித்தல்

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இலவச முத்திரைகளில் பயன்படுத்தப்படாதவற்றை அருகில் உள்ள தபால் அலுவலகத்தில் அல்லது பாராளுமன்றத்தில் ஒப்படைக்குமாறு தபால் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து, இம்முத்திரைகளைப் பயன்படுத்துவதற்கு தடையென, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த முத்திரைகளை செல்லுபடியற்றவையாக கருதப்பட வேண்டுமென, நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்களுக்கும் தபால் மா அதிபர் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin