தொடரும் இந்திய மீனவர்களின் கைது.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்றிரவு(06) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில்... Read more »

மன்னாரில் கனிய மண்ணகழ்வு தொடர்பான சுற்றுச்சூழல் குழுக் கூட்டம்.

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் கனிய மண்ணகழ்வு தொடர்பான மன்னார் மாவட்ட சுற்றாடல் அமுலாக்கள் குழு கூட்டம் நேற்றைய தினம் (06.03)வியாழக்கிழமை  மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில்  நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில்... Read more »
Ad Widget

தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு.

தேசிய மக்கள் சக்தியின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட குழுவினர், நேற்றைய தினம்(05.03)புதன் கிழமை மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதி மக்களால் முன்வைக்கப்பட்ட குறைகளைக் கேட்டு அறிந்த பாராளுமன்ற உறுப்பினர் விரைவில் அவற்றை... Read more »

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் வியாழக்கிழமை (6.3) மதியம் மன்னார் மாவட்டத் தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் என்.எம்.எம்.பாரீஸ் தலைமையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள்... Read more »

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு.

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனம் மார்ச் மாதத்திற்கான சமையல் எரிவாயுவின் சில்லறை விலை திருத்தத்தை இன்று (06) வியாழக்கிழமை அறிவிக்க உள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதி அமைச்சகத்துடன் இன்று (06) கலந்துரையாடல் நடைபெற உள்ளதாக நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.... Read more »

மொட்டு கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளராக மதனவாசன் நியமனம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக முன்னாள் சிரேஷ்ட ஊடகவியலாளரும், கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் முன்னாள் தவிசாளருமான ப.மதனவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமன கடிதத்தை மொட்டு கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்தார். Read more »

யாழ் பல்கலைக்கழகத்திற்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் நியமனம்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு வெளிவாரி பேரவை உறுப்பினர்களாக 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நியமனங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்தினவால் வழங்கப்பட்டுள்ளது.குறித்த நியமனங்கள் கடந்த ஐந்தாம் திகதி முதல் மூன்று வருட காலங்களுக்கு செயற்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.நியமனம் பெற்றவர்களின் விவரங்கள்... Read more »

OL பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைப்பு.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அனுமதி அட்டைகள் தபால்மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பாடசாலை விண்ணப்பதாரர்களின் பரீட்சை அனுமதி அட்டைகள் அதிபர்களுக்கும் தனியார் விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் அவர்களின் முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்... Read more »

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள வீதிகள் திறப்பு.

யால தேசிய பூங்காவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீதிகளை இன்று (05) முதல் மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக யால தேசிய பூங்காவின் வீதி அமைப்பிற்கு... Read more »

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பரிசுத்தொகை அதிகரிப்பு.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதை விட அதிகமான பரிசுத்தொகையை வழங்குவதாக பொலிசார் அறிவித்துள்ளனர். அதன் பிரகாரம் ,ரூபா 10 இலட்சமாக இருந்த பரிசுத்தொகை தற்பொழுது ரூபா 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும்... Read more »