தொடரும் இந்திய மீனவர்களின் கைது.

மன்னாருக்கு தெற்கே உள்ள கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு(06) கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன் அவர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

Recommended For You

About the Author: ROHINI ROHINI