பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம்... Read more »

பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டுவதில்லை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொதுவான ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கு பதிலாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களை ஈடுபடுத்துவது சிறந்தது. தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை... Read more »
Ad Widget

ஷர்மா – பாண்டியா ரசிகர்கள் மைதானத்தில் அடிதடி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் போது ஹர்த்திக் பாண்டியா மற்றும் ரோகித் ஷர்மாவின் ரசிகர்கள் மைதானத்துக்குள் கடுமையாக மோதிக்கொண்டனர். இது குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர... Read more »

பிலிப்பைன்ஸில் பொருளாதார மண்டலம் சீன கட்டுப்பாட்டில்

பிலிப்பைன்ஸில் உள்ள சீனத் தூதரகத்தின் பொறுப்பாளர்களை வரவழைத்து, தென் சீனக் கடலில் சீன கடலோரக் காவல்படையின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சகம் சீன வெளியுறவு அமைச்சகத்திடம் முறைப்பாடு அளிக்க பெய்ஜிங்கில் உள்ள அதன் பணியகத்துக்கும் உத்தரவிட்டுள்ளது. தென்... Read more »

இலங்கையில் மூடப்பட்டது மெக்டொனால்டு துரித உணவகங்கள்

மெக்டொனால்டு நிறுவனம் இலங்கையில் உள்ளூர் பங்குதாரருடன் செய்து கொண்ட உடன்படிக்கையை முடிவுக்குகொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் புதிய உரிமையாளருடன் விரைவில் இலங்கையில் சேவைகளை முன்னெடுக்க முடியும் என அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனம் அறிவித்துள்ளது. மெக்டொனால்டு நிறுவனத்தின் தாய் நிறுவனம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான... Read more »

கனடா செல்ல தொழில் வாய்ப்பை வழங்கும் முக்கிய மாநிலம்

உலகில் மிகப்பெரிய நாடுகளில் கனடாவும் ஒன்றும். இங்கு நிலப்பரப்புக்கு ஏற்ப மக்கள் தொகை இல்லை என்பதுடன், பலநாடுகளில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் இங்கு தொழில்துறை வலுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவுக்கு சென்றால் அகதி அந்தஸ்து கிடைப்பது உறுதியென அங்குள்ள புலம்பெயர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு சட்டவிரோதமான வழிகளை... Read more »

மைத்திரி ஆறு மணித்தியாலம் சி.ஐ.டியிடம் வாக்குமூலம்

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆறு மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் வெளியேறியுள்ளார். விசாரணைகள் நிறைவடைந்ததையடுத்து பிரதான நுழைவாயிலில் வெளியேறாது மற்றுமொரு வழியே வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இன்று காலை 10.30 மணியளவில் சாட்சியம் வழங்க அவர்... Read more »

பங்களாதேஷ் மண்ணில் இலங்கை அபார வெற்றி

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. முதல் இன்னிங்ஸில் கமிது மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அணித்தலைவர்... Read more »

மொஸ்கோவில் தீவிரவாதத் தாக்குதலின் எதிரொலி: பிரான்ஸில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து பிரான்ஸ் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அடிப்படையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மிக உயர்ந்த நிலையில் குறிப்பாக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும்... Read more »

தேர்தல் முறை மாற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியும் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், சட்டத்தை வரைவும் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தவும் விசேட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு இந்த நிலையில், அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான இ.தொ.கா... Read more »