இலங்கை பெற்றோலிய கூட்டுஸ்தாபனம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

கொழும்பில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியில் சிறிது தண்ணீர் கலந்திருந்தமை தொடர்பில் தெளிவுபடுத்தி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையதிற்கு நேற்று (19) கொண்டுவரப்பட்ட எரிபொருள் தாங்கியிலேயே இவ்வாறு தண்ணீர் கலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக உடனடியாக முழுமையான விசாரணையை நடத்துமாறு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, கூட்டுத்தாபன அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor