கொழும்பு மாநகரசபையின் முக்கிய அறிவித்தல்!

கொழும்பு மாநகரசபை பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.

அதன்படி கொழும்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் நகர வீதிகளில் வாகனத் தரிப்பிடக் கட்டணம் வசூலிக்க எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ தற்போது அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வரும் வரை அறிவுறுத்தல்
எனவே மறு அறிவிப்பு வரும் வரை, கொழும்பு மாநகர சபையினால் பராமரிக்கப்படும் வீதிகளில் வாகனங்களை நிறுத்தும் போது வாகன தரிப்பு கட்டணம் செலுத்துவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவைப்படுமாயின் 0112698529 என்ற இலக்கத்தை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: webeditor