ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல்முறையாகத் தன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு!

மத்திய கிழக்கு: ஏப்ரல் 8 போர்நிறுத்தத்திற்குப் பிறகு முதல்முறையாகத் தன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு!

கடந்த ஏப்ரல் 8-ஆம் திக தி போர்நிறுத்தம் (Cessez-le-feu) அறிவிக்கப்பட்ட பிறகு, முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமையன்று (இன்று) ஈரானியப் படைகளின் தாக்குதலுக்குத் தாங்கள் இலக்காகியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

 

“சற்று நேரத்திற்கு முன்பு, ஈரான் நாட்டிலிருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதை ராணுவம் கண்டறிந்துள்ளது” என இஸ்ரேலிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தத் திடீர் தாக்குதலால் தற்போதைய போர்நிறுத்தமும் அமைதிப் பேச்சுவார்த்தைகளும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

Recommended For You

About the Author: admin