ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான் – உலகளாவிய எரிபொருள் சந்தையில் பதற்றம்!

அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள கடற்படை முற்றுகையைத் தளர்த்தத் தவறியதே இந்த முடிவுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா தனது கடல்சார் முற்றுகையைத் தளர்த்தவில்லை எனவும், இது தங்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் எனவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஹார்முஸ் நீரிணை ஊடாகச் செல்லும் வர்த்தகக் கப்பல்கள் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன அல்லது ஈரானின் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் பல கப்பல்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் நிலைப்பாடு: ஈரானை ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தத்திற்கு இணங்கச் செய்யவே இந்த முற்றுகை அவசியமானது என ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.

இந்தத் திடீர் நகர்வு சர்வதேசக் கடல் வணிக விதிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளதுடன், உலகளாவிய பொருளாதாரத்தில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Recommended For You

About the Author: admin