கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு தமிழர்கள் உயிரிழப்பு!

கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்கு காரணம் வெளியாகவில்லை
மூன்றாவது முன் பயணி 52 வயது பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தொடர்ந்து வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. டிரக்கின் சாரதி, 46 வயதுடைய நபர், சம்பவ இடத்தில் இருந்துள்ளார், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கு என்ன காரணம் என்று தெரிவிக்கவில்லை. விசாரணை நடந்து வருகிறது, சம்பவத்தின் சாட்சிகள் அல்லது காணொளி காட்சிகள் உள்ள யாரேனும் தகவல் வழங்க முன்வருமாறு புலனாய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்

Recommended For You

About the Author: webeditor