ஈரான் இராணுவம் UAE துறைமுகங்களிலிருந்து குடியிருப்பாளர்கள் விலகி இருக்குமாறு எச்சரிக்கை!
ஈரான் இராணுவம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், டுபாய் நாட்டின் துறைமுகங்களை தாங்கள் சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதுகின்றோம் என்றும், அங்கு வசிக்கும் மக்களை துறைமுகப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் எச்சரித்தது. இந்த அறிக்கை அரசு தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.
தெஹ்ராற் தனது தேசிய இறையாண்மை மற்றும் நிலப்பரப்பை பாதுகாப்பதற்காக, UAE துறைமுகங்கள், துறைமுகத் தளங்கள் மற்றும் அமெரிக்க இராணுவம் மறைந்திருக்கும் இடங்களில் உள்ள “அமெரிக்க எதிரி ஏவுகணைகளை” தாக்குவது தங்களின் சட்டபூர்வமான உரிமை என்று ஈரான் இராணுவத்தின் மத்திய செயல்பாட்டு கட்டளை Khatam al-Anbiya Central Headquarters தெரிவித்துள்ளது.
மேலும், பொதுமக்கள் துறைமுகப் பகுதிகளை உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

