கல்முனையில் மாயமான மீனவர்கள் மீட்பு!

கல்முனை கடலில் கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக மிட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை – கல்முனையில் இருந்து கடந்த 26 செப்டம்பர் மாதம் ஆழ்கடல் மீன் பிடிக்கு சென்ற 4 மீனவர்கள் 15 நாட்கள் கடந்தும் இன்னும் வீடு திரும்பவில்லை என கூறப்பட்டிருந்த நிலையில், மீனவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜிபிஸ் தொழிநுட்ப கருவி பழுது
கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.

சம்பவத்தில் கல்முனையை சேர்ந்த எம்.ஐ.எம் மஜிட் (வயது 55), சி.எஸ்.எச்.எம் நிப்றாஸ் (வயது 36 ), ஏ.பி. கபீர் (வயது 50), எம்.என். ஹில்மி (வயது 33) ஆகிய மீனவர்களே குறித்த படகில் பயணம் செய்து காணாமல் போய் இருந்தனர்.

அவர்கள் சென்ற படகின் ஜிபிஸ் தொழிநுட்ப கருவி பழுதடைந்தமையினால் திசை மாறி பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு திசை மாறி தத்தளித்த குறித்த படகினை ஒரு மீனவர் கண்டு கடற்படையினருக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய மீட்பு நடவடிக்கை உள்ளுர் மீனவரின் ஒத்துழைப்புடன் கரைக்கு காணாமல் சென்ற 4 மீனவர்கள் உள்ளிட்ட படகு வாழைச்சேனை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

மேலும் மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனையின் பின்னர் வீடுகளுக்கு செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor