தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறையின் ஏற்பாட்டில் தூய்மையான திருநீறு தயாரிப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் புதன்கிழமை (12.10.2022) மதியம் 12.30 மணியளவில் சைவசித்தாந்தத்துறை விரிவுரை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் சிறிசற்குணராசா, இந்துக் கற்கைகள் பீடாதிபதி, துறைத்தலைவர்கள், தகைசார் பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இந்துக் குருமார்கள், சைவ அறிஞர்கள், திருநீறு தயாரிப்பவர்கள் மற்றும் ஆர்வலர்கள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor