நாட்டில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்கள் குறித்து பொலிசார் விடுத்துள்ள எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பொது போக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொள்ளைச் சம்பவங்கள்

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளிலும் புகையிரதங்களில் பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார் .

மக்களுக்கு எச்சரிக்கை

இதனையடுத்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீடுகளுக்குள் புகுந்த பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக வீடுகளின் கதவுகளை பாதுகாப்பான முறையில் பூட்டி வைக்குமாறு பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: webeditor