10 மில்லியன் ரூபாய் நன்கொடையை வழங்கிய லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம்..!
“இலங்கையை மீளமைக்கும் நிதி” (Rebuilding Sri Lanka Fund)க்கு 10 மில்லியன் ரூபாய் நன்கொடையை லண்டன் தொழிலதிபர் வேலுப்பிள்ளை சிவசுந்தரம் வழங்கியுள்ளார்.
டிட்வா (Cyclone Ditwah) காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், இயற்கை பேரழிவால் சீரழிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைக்கவும் இலங்கை அரசு அண்மையில் “இலங்கையை மீளமைக்கும் நிதி”யை நிறுவியது.
இந்த தேசிய முயற்சிக்கு ஆதரவாக, திரு. வேலுப்பிள்ளை சிவசுந்தரம் 10 மில்லியன் ரூபாய் என்ற பெருந்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் செயல்படும் வெஸ்டர்ன் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவுனரும் மற்றும் இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள ஆவரங்கால் சிவசக்தி திருமண மண்டபத்தின் நிறுவுனருமான ஆகிய திரு. சிவசுந்தரம் தனது நன்கொடையை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திகா சனத் குமணாயக்க அவர்களிடம் கையளித்திருந்தார்.

