எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும்..!
ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி முன்னாள் அமைச்சர் டக்ளஸ்
என்னை திடீரென கைதுசெய்ததன் காரணமாக எனது மக்ககுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை என்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இருந்தாலும் இன்று நான் விடுவிக்கப்பட்டிருக்கின்றேன். அந்தவகையில் எனது மக்களும் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட எனக்கு பல வழிகளிலும் தமது உணர்வுகளை எனக்கு வெளிப்படுத்துயுள்ளனர்.
நாட்டினுடைய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கா அவர்களுக்கு நன்றி. அதேபோன்று எனதுதரப்பு உண்மைகளை எடுத்துரைத்த சிரேஸ்ர ஜனாதிபதி சட்டத்தரணி சாலிக பீரிஸ் அவர்களுக்கும் அவரது குளுவினருக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே நேரம் அந்த நியாயங்களை உணர்ந்து கொண்ட ஹம்பகா மாவட நீதிபதி அவர்களும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

