நுவரெலியாவிலிருந்து வானூர்தி ஊடாக உலர் உணவு, மருந்து பொருட்கள் அனுப்பி வைப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட மோசமான வானிலையால் கடும் மழை மற்றும் வெள்ளத்துடன் மண்சரிவுகள் ஏற்பட்டது .

இதில் அதிகம் கொத்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட பொது மக்களை தற்காலிக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே இவர்களுக்கு தேவையான ஒரு தொகுதி உலர் உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்களை இன்று (02) நுவரெலியாவிலிருந்து Mi-17 உலங்கு வானூர்தி ஊடாக அனுப்பி வைக்கப்பட்டது.

குறித்த உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களும் நுவரெலியா இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நுவரெலியா மாநகரசபை மைதானத்தில் இருந்து கொத்மலையில் உள்ள காமினி திசாநாயக்க மைதானத்திற்கு விசேட வானூர்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin