பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..!

பூநகரியில் இடம்பெற்ற அனர்த்த முன்னாயத்த கலந்துரையாடல்..!

எதிர்வரும் நாட்களில் அதிக காற்று மற்றும் அதிக மழை வீழ்ச்சி காரணமாக ஏற்படவிருக்கும் இயற்கை அனர்த்தங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் (26.11.2025) பூநகரி பிரதேச செயலாளர் திரு. வேல்முருகு ஆயகுலன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் உதவிப் பிரதேச செயலாளர், நிர்வாகக் கிராம அலுவலர், கிராம அலுவலர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு தங்களாலான முன்னாயத்த செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: admin