சாணக்கியன் MPக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

சாணக்கியன் MPக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

சாணக்கியனுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை,உயிரிழந்த வெலிகம பிரதேச சபையின் தவிசாளர், முன்னதாக, பாதுகாப்புக்கோரி, பொலிஸ் மாஅதிபர் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்ததாக குறிப்பிட்ட அமைச்சர், அதன்பின்னர் அவருக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் கூறினார்.

மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது சிறந்த ஒருவரைத் தெரிவு செய்தால் அவர்களுக்கு எவ்வித சிக்கல்களும் இன்றி பொலிஸ் பாதுகாப்பை வழங்க முடியும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin