இலங்கைக்கு வருபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இன்று முதல் (அக்டோபர் 15) ETA கட்டாயம்!

​இன்று (அக்டோபர் 15, 2025) முதல் அமுலுக்கு வரும் வகையில், வெளிநாடுகளில் வசிக்கும், இலங்கையர் அல்லாத கடவுச்சீட்டுகளை வைத்திருக்கும் அனைவரும் இலங்கைக்குப் பயணம் செய்வதற்கு முன்னர் மின்னணுப் பயண அங்கீகாரத்தை (Electronic Travel Authorisation – ETA) கட்டாயம் பெற வேண்டும்.

கடந்த சில மாதங்களாக, வெளிநாட்டுப் பயணிகள் விமான நிலையத்தில் வந்திறங்கியவுடன் வருகை விசா (Visa on Arrival) பெறும் வசதியைப் பயன்படுத்தி, 30 நாட்கள் நுழைவு அனுமதியைப் பெற்று வந்தனர்.

இருப்பினும், அக்டோபர் 15 முதல், பயணிகள் இலங்கைக்குப் புறப்படுவதற்கு முன்னர், கட்டாயம் இணையம் மூலம் விண்ணப்பித்து, ETA அனுமதியை முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும்.

முன்கூட்டிய ETA அனுமதி இல்லாதவர்களுக்கு விசா தேவைகள் காரணமாக விமான நிறுவனங்களால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்படும்.

​ETA அனுமதி பொதுவாக சில மணி நேரங்களில் வழங்கப்படுவதால், பயணிகள் புறப்படுவதற்கு முன் இணையம் மூலம் ETA-க்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: admin