யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த 4 இளைஞர்கள் கைது

​யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் வைத்திருந்த நான்கு நபர்கள் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 16 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குகிறார்.

​கைது செய்யப்பட்டவர்கள் 16, 18, 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என்றும், அவர்களிடமிருந்து 170 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் இந்த கைதுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

​சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin