Air Guns இன் பயன்பாடு குறித்த அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டுதல் பயிற்சிநெறி இன்று (12.08.2025) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார ஆகியோரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
குறித்த பயிற்சிநெறியானது பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் அறுவடை காலத்தில் காட்டு விலங்குகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்காக ரூபா 8,032,500.00 பெறுமதியான Air Guns, 06 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, பிரதேச செயலகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டன .
பட்டினமும் சூழலும், குச்சவெளி, தம்பலகாமம், கோமரங்கடவல, சேருவில மற்றும் மூதூர் ஆகிய பிரதேச செயலகங்களுக்குமாக 153 Air Guns வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதம கணக்காளர் ப.ஜெயபாஸ்கர், கணக்காளர் ஏ.எல்.பிரசாத் விஜேசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே. விஜயதாசன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் என். கோவிந்தராஜன், மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக அதிகாரிகளும் பலரும் கலந்து கொண்டனர்.


