பேருந்துக்குள் பெண்ணுக்கு அரங்கேறிய சம்பவம்..! கணவன் செய்த செயல்

பதுளையில் பேருந்துக்குள் கணவனின் கத்துக்குத்துக்கு இலக்காகி மனைவி படுகாயமடைந்துள்ள சம்பவத்தால் அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இச் சம்பவம் இன்று (09) காலை பதுளையில், பண்டாரவளை பிரதான பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்றுக்குள்ளேயே இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த 32 வயதான மனைவி பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மனைவியை கத்தியால் குத்திய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்பப் பிரச்சினையின் காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் மாலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin