யாழ்ப்பாணம், கொக்குவிலில் முன்னாள் பெண் போராளி தற்கொலை
யாழ்ப்பாணம், கொக்குவில் கிழக்கில் வசித்து வந்த திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் நேற்று (ஜூலை 27) தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர், அப்பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சகோதரியுடன் வசித்து வந்த இவர், மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று நண்பகலில் உணவருந்திய சிறிது நேரத்திலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார், மரண விசாரணையை நடத்தியுள்ளார்.
உடற்கூற்றுப் பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

