தேசிய பாடசாலைகள் பெயர் பலகைகளுக்கு ரூ. 2.4 மில்லியன் செலவு

தேசிய பாடசாலைகள் பெயர் பலகைகளுக்கு ரூ. 2.4 மில்லியன் செலவு:

809 மாகாணப் பாடசாலைகளை ‘தேசியப் பாடசாலைகள்’ எனப் பெயரிடுவதற்கு, எந்தவிதமான உட்கட்டமைப்பு அல்லது நிர்வாக மேம்பாடுகளும் இன்றி, வெறும் பெயர் பலகைகளுக்காக 2.4 மில்லியன் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக பொதுக் கணக்குக் குழு (COPA) வெளிப்படுத்தியுள்ளது.

 

கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் இந்தத் திட்டத்தை அமுல்படுத்துவது குறித்து அண்மையில் இடம்பெற்ற COPA அமர்வின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது. பாடசாலைகள் பெயரளவில் மட்டுமே தேசியமயமாக்கப்பட்டுள்ளன என்றும், மேம்படுத்தப்பட்ட நிலையை பிரதிபலிக்கும் வகையில் எந்த முன்னேற்றமும் செய்யப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முன்னைய அரசாங்கத்தின் 1,000 தேசியப் பாடசாலைகளை அதிகரிக்கும் முயற்சி, அத்துடன் இராஜாங்க அமைச்சின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட 72 திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சிடம் COPA கோரியுள்ளது.

Recommended For You

About the Author: admin