முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை!
வெலிகேபொல பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (UPFA) உறுப்பினர் அலிபேபி என அழைக்கப்படும் கொடித்துவக்கு ஆரச்சிலாகே வசந்த, 2012 இல் ஹட்டங்காலா பகுதியில் கடத்தி கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகல இந்த உத்தரவை பிறப்பித்தார். வசந்த, ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

