யாழில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்திய கும்பல் ஒன்று கைது!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதுடன், மோட்டார் சைக்கிளை தீ வைத்துக் கொழுத்திய சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் யாழ்.தாவடி பகுதியில் கடந்த 25 ஆம் திகதி இரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

சுமார் ஆறு பேர் கொண்ட குழுவினர் வீட்டினை சேதப்படுத்தியதோடு வீட்டில் நின்ற மோட்டார் சைக்கிளை எரியூட்டிவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட யாழ்.மாவட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டு சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: webeditor