முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம்

நாடாளுமன்ற தேசிய பேரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இணைந்துக்கொள்ளாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று (28-09-2022) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் (Dinesh Gunawardena) பிரேரணையின் அடிப்படையில் ஸ்தாபிக்கப்பட்ட, அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தேசிய சபைக்கு நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் செப்டெம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) தலைமையில், நாடாளுமன்ற தேசிய பேரவையின் ஆரம்ப கூட்டம் நாளை (29) காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor