சஜித் பிரேமதாச விடுத்துள்ள அறிவிப்பு!

இலங்கையில் நாளையதினம் (29-09-2022) இடம்பெற்றவுள்ள நாடாளுமன்ற தேசிய சபையில் பங்கேற்கப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பல பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வதால் நாடாளுமன்ற தேசிய சபையில் கலந்துகொள்ள போவதில்லை என தெரிவித்துள்ளார்.

குறுகிய அறிவிப்பின் பேரில் திடீரென நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சபையில் பங்கேற்பதா என்பது குறித்து கட்சி கொள்கை முடிவு எடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தின் பொது அலுவல் குழு மற்றும் பொது கணக்கு குழுவின் தலைவர் பதவியை தமது கட்சிக்கு கிடைக்காவிடின் தேசிய சபையை நிராகரிக்க நேரிடும் எனவும் எதிர்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor