எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஐந்து சபைகளில் போட்டியிடவுள்ள ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்,
மன்னார் நகரசபை உட்பட நான்கு பிரதேச சபைகளிலும் போட்டியிட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையிலான சிறிலங்கா தொழிலாளர் கட்சி சார்பாக  இன்றைய தினம் (14.03) வெள்ளிக்கிழமை மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மாவட்ட இணைப்பாளர் அபூபக்கர் தர்ஷின் தலைமையிலான குழுவினர்,

மன்னார் மாவட்டத்தின் மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை நானாட்டான் பிரதேச சபை,முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய  ஐந்து    உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI