யாழ்.மாவட்ட இந்து அறநெறிப் பாடசாலைகளில் சொற்பொழிவு

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’  கனடா ரொன்ரோ வதிவிடமாகக்கொண்ட
சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள் அவர்களின்   அனுசரணையுடன்   சமயஜோதி திரு.கதிர்காமன் நிஜலிங்கத்தின்  ஒழுகமைப்பில்  தொடர்  39 ஆவது  சொற்பொழிவு நிகழ்வு வேலணை மடத்துவெளி முருகன்  அறநெறிப் பாடசாலை  மண்டபத்தில்  22.09.2022    வெள்ளிக்கிழமை   மாலை   03.30 மணிக்கு   இடம்பெற்றது.

நாவலர் குருபூஜை,  மற்றும் தலைமையுரை நிகழ்வுகளைத் தொடர்ந்து, “கலியுகத்தில் நமக்கு வழிகாட்டிய அவதாரம் ஆறுமுகநாவலர் பெருமான்” என்னும்  தொனிப்பொருளில் இளம்சைவப்புலவர் நித்தியபாபுதரன் அவர்களின் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்வும் அதனைத் தொடர்ந்து சொற்பொழிவிலிருந்து வினாக்கள் தொடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பாராட்டுப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும்  இடம்பெற்றது.

Recommended For You

About the Author: webeditor