திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட குழு அமைப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நினைவேந்தல் நிகழ்வை ஒழுங்கமைக்க 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பு இன்று தெரிவு செய்யப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு 15 பேர் கொண்ட பொது அமைப்புக்களுடனான கட்டமைப்பை தெரிவு செய்யும் உயர்மட்ட கலந்துரையாடல் இன்று மாலை நல்லை ஆதினத்தில் இடம்பெற்றது.

இதில் நல்லை ஆதீனக் குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், யாழ். மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், வடமாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்க வடமாகாண அமைப்பாளர் வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார், தமிழ்த் தேசியக் கட்சியின் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் சமூகத்தினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor