காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் உள்ளிட்ட உயர் மட்டக் குழுவினர் மன்னார்,சிவில் சமுக கட்டமைப்புக்களுடன்,கலந்துரையாடல்.

இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும். அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமுக அமைப்புகளுக்கும். அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையேயான தொடர்பை வலுப்படுத்தி. அந்த வலுப்படுத்துதல் ஊடாகக் காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இக்கலந்துரையாடல் இடம்பெற்றதாகக் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் யோகராஜா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட அரச அதிபர் கனகேஸ்வரன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,

கொழும்பிலிருந்து வருகை தந்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் T. யோகராஜா. உட்பட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ,சட்டத்தரணி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர்.
மற்றும் மன்னார் பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI