16 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த இளம் பள்ளி ஆசிரியர் கைது!

திம்புலாகலை கல்வி வலய , வெலிகந்த கல்விப் பிரிவுக்குட்பட்ட அரச பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியர் ஒருவர் 16 வயது பாடசாலை மாணவியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெற்றோரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்றைய தினம் (22.10)குறித்த ஆசிரியரைக் கைது செய்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஆசிரியர்
அநுராதபுரத்தில் இருந்து குறித்த பாடசாலைக்கு கணிதம் கற்பிக்க வந்த 25 வயதுடைய திருமணமாகாத நபர் என ,விசாரணைகளை மேற்கொண்டு வரும் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் செனவிரத்ன, தெரிவித்துள்ளார்.

மேலும், கணித ஆசிரியருடன் சிறுமி பல சந்தர்ப்பங்களில் இருந்த உறவு மற்றும் கணித ஆசிரியரால் அவள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து தனது தோழியுடன் பேசிய தொலைபேசி ஒலிப்பதிவையும் முறைப்பாடு செய்த பெற்றோர்கள் வழங்கியுள்ளதாகவும் ,

குறித்த கணித ஆசிரியரை கைது செய்து தண்டிக்காவிட்டால் இது தொடர்பில் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களுக்கும் அறிவித்து அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும்,

எதிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஆசிரியர்களால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கத் தேவையான சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் எனவும்
வெலிகந்த பொலிஸாரிடம் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமி வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பான பரிசோதனைகளுக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,

இச்சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில் வெலிகந்த பொலிஸ் நிலைய பதில் பொலிஸ் பரிசோதகர் பிரதீப் செனவிரத்ன உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: ROHINI ROHINI