அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள பதில் பொலிஸ்மா அதிபர்!

எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகள் தொடர்பாக அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளையும் அடுத்த இரண்டு வாரங்களில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார்.

Recommended For You

About the Author: admin