கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் பலி!

கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்திப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலின் பின்னர், பலத்த காயமடைந்த அவர், ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 32 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin