பிரபல அரசியல்வாதியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்!

அநுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை ஒன்றின் முன்னாள் தலைவர் ஒருவரின் வீட்டிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அநுராதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போதைப்பொருளை மொத்தமாக விநியோகித்ததாகக் கூறப்படும் அந்த அரசியல்வாதியின் மகன் உட்பட மூவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin