உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணம் 

உழவு இயந்திரத்துடன் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் அமைந்துள்ள மல்வத்தை பள்ளிவாசலுக்கு அருகாமையில் நேற்று சனிக்கிழமை மாலை 4.15 மணியளவில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.

 

இந்த விபத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த சம்மாந்துறை, விளினியடியைச் சேர்ந்த அசனார் முகம்மட் இஸ்மாயில் (வயது 64) என்பவரே மரணமடைந்துள்ளார். அவருடன் பயணித்த ஒருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் சேர்க்ககப்பட்டுள்ளார்.

குறித்த உழவு இயந்திரம் வயலை உழுது விட்டு வீடு திரும்பும் வழியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உழவு இயந்திரத்துடன் மோதிய கனரக வாகனத்தின் சாரதி சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தில் மரணமடைந்தவரின் சடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin