மக்களின் வறுமையை கேலி செய்த ரணில்

தனக்கு அதிகாரத்தை வழங்கிய இந்த நாட்டின் அப்பாவி மக்கள் மீது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேலி செய்ததாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

மொறவக்க பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அந்தக் கட்சியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

மக்களின் உணர்வுப்பூர்வமான விடயம் குறித்து பேசியதையடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதனை கிண்டல் செய்ய ஆரம்பித்துள்ளார்.

ஜனாதிபதி அந்த நகைச்சுவையை எங்களை நோக்கிச் செய்யவில்லை. மாறாக தமக்கு அதிகாரத்தை வழங்கிய இந்த நாட்டின் அப்பாவி மக்கள் மீதே இவ்வாறு கேலி செய்துள்ளார்.

இந்நிலையில், எதிர்வரும் 21ஆம் திகதி மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin