ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன்: மாங்குளம் பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்ட சுயாதீன ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனை மாங்குளம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு விசாரணைக்கு வருமாறு மாங்குளம் பொலிசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

07.08.2024 அன்று இரவு ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் வீட்டில் இல்லாத நிலையில் வீட்டுக்கு சென்ற பொலிசார் அவருக்கான அழைப்பு கடிதத்தினை குடும்பத்தாரிடம் வழங்கி சென்றுள்ளனர்.

எந்தவித காரணங்களும் குறிப்பிடாது உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவுசெய்ய இருப்பதனால் 2024.08.09 ம் திகதி காலை 9 மணிக்கு மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் காரியாலயத்துக்கு வருகை தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறித்த கடிதத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

utru

Recommended For You

About the Author: admin