8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார்: பப்ரல்

இலங்கைத்தீவில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார் என பப்ரல் (Paffrel) அமைப்பு அறிவித்துள்ளது.

பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலர் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக சிவில் அமைப்பு என்ற வகையில் பப்ரல் அமைப்பு கடுமையாகப் பதிலளித்தது.

Recommended For You

About the Author: admin